செய்திகள்
கோப்புபடம்

மத்திய அரசு திட்டங்கள் குறித்து பிரசாரம்

Published On 2021-11-30 04:21 GMT   |   Update On 2021-11-30 04:21 GMT
திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசு மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்து கூறினர்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி 3-வது வார்டு பா.ஜ.க., சார்பில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெருமுனை பிரசாரம் நடந்தது.பா.ஜ.க., மண்டல தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். பிரசாரத்தை மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி தொடங்கி வைத்தார். 

மாவட்ட துணை தலைவர் பாலு, மாவட்ட மகளிரணித் தலைவி சுதா, மாவட்டத் துணைத் தலைவர் அன்பழகன் ஆகியோர் பேசினர்.

அனைவருக்கும் தடுப்பூசி, அனைவருக்கும் வீடு திட்டம், தூய்மை இந்தியா, விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை திட்டம், திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசு மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்து கூறினர்.
Tags:    

Similar News