செய்திகள்
கோப்பு படம்.

அந்தியூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

Published On 2020-10-18 07:26 GMT   |   Update On 2020-10-18 07:26 GMT
அந்தியூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள குப்பாண்டபாளையம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மகன் அய்யாசாமி (வயது 27). எலக்ட்ரீசியன். திருமணம் ஆகாதவர்.

இந்த நிலையில் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டப்பட்டு வருகிறது.

இங்கு நேற்று அய்யாசாமி மின் இணைப்பு கொடுத்து கொண்டிருந்தார். அவருடன் பிரகாஷ் என்பவரும் வேலை பார்த்தார்.

அப்போது அய்யாசாமியை மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். உடனே இதுபற்றி ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அய்யாசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News