உள்ளூர் செய்திகள்
கோவிலில் கொள்ளை

கோவில் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2022-01-24 10:15 GMT   |   Update On 2022-01-24 10:15 GMT
திருமங்கலம் அருகே கோவில் பூட்டை உடைத்து பித்தளை பாத்திரங்களை கொள்ளையடித்து சென்றனர்.
திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில்  முத்து மாரியம் மன் கோவில் உள்ளது. இங்கு பூசாரியாக அதே பகுதியைச் சேர்ந்த பிச்சை (வயது62) உள்ளார்.

இவர்  கோவிலில் காலை பூஜை முடித்து விட்டு நடை சாத்தி விட்டு சென்றார். மீண்டும்  மாலை 3 மணி அளவில் கோவிலை திறப்பதற்காக  பிச்சை வந்தார்.

அப்போது கோவிலின் முன்புறம் உள்ள கிரில்  கேட்டின் பூட்டு உடைந்து தொங்குவதை   கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, 3 பித்தளை பொங்கல் பானை, ஒரு பித்தளை   கரண்டி,  சிறிய வேல்  ஆகியவை கொள்ளைபோய் இருப்பது  தெரியவந்தது.
 
இதுதொடர்பாக  ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் பிச்சை புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News