வழிபாடு
திருப்பதி கோவிலில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள்.

திருப்பதியில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது

Published On 2022-01-13 04:48 GMT   |   Update On 2022-01-13 06:43 GMT
திருப்பதி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் திருப்பாவை தோமாலை உள்ளிட்ட சேவைகள் நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் திருப்பாவை தோமாலை உள்ளிட்ட சேவைகள் நடந்தது.

இதையடுத்து வி.ஐ.பி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் காலை 9 மணிக்கு ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட், கல்யாண உற்சவம் தோமாலை உற்சவம் மற்றும் ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியவர்கள் வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

22-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்

சொர்க்கவாசல் திறப்புயொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தன. இதேபோல் கோவில் நுழைவாயில், கொடிமரம், கோவில் பிரகாரம் முழுவதும் பல்வேறு மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

திருப்பதியில் நேற்று 25,524 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 13,052 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.1.59 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
Tags:    

Similar News