செய்திகள்
கைது

மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 9 பேர் சிக்கினர்

Published On 2020-10-18 08:09 GMT   |   Update On 2020-10-18 08:09 GMT
கோவை அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை உக்கடம், சாய்பாபாகாலனி, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற கோவையை சேர்ந்த ரமேஷ், லட்சுமணன், ஆறுமுகம், புதுக்கோட்டையை சேர்ந்த கார்த்திக், வீரசேகரன், இளையராஜா, மதுரையை சேர்ந்த செல்லையா, ராஜ்குமார், ஆனந்தமுருகன் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News