ஆன்மிகம்
விஷ்ணு

எந்தக் காரியத்தை செய்யும் பொழுது விஷ்ணுவின் எந்தப் பெயரை உச்சரிக்க வேண்டும்

Published On 2021-02-04 03:40 GMT   |   Update On 2021-02-04 03:40 GMT
விஷ்ணுவிற்குரிய எண்ணற்ற நாமங்களில் எந்தக் காரியத்தை செய்யும் பொழுது எந்தப் பெயரை உச்சரிக்க வேண்டுமென்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அவை வருமாறு:
விஷ்ணுவிற்குரிய எண்ணற்ற நாமங்களில் எந்தக் காரியத்தை செய்யும் பொழுது எந்தப் பெயரை உச்சரிக்க வேண்டுமென்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அவை வருமாறு:

சாப்பிடும்போது: ‘கிருஷ்ணா’, படுக்கச்செல்லும்போது: ‘பத்மநாபா’, யுத்தத்தின் போது: ‘சக்ரதாரி’, வெளியே கிளம்பும்போது: ‘திரிவிக்ரமா’, கெட்ட கனவுகளைக் கண்டால்: ‘கோவிந்தா’, ‘கண்ணா’, காட்டு வழியில் செல்லும்போது: ‘நரசிம்மன்’, சுபகாரியப் பேச்சுநடக்கும் போது: ‘நாராயணா’, மருந்து உண்ணும் போது: ‘மகாவிஷ்ணு’ என்றும், ஆரோக்கியம் சீராக: ‘ஸ்ரீராமா’, ‘மாதவா’, ‘கேசவா’ என்று நாம் உச்சரிக்க வேண்டும்.

இவ்வாறு உச்சரித்தால், ‘உரு ஏற, உரு ஏறத் திரு ஏறும்’ என்பது போல, காக்கும் கடவுளாம் விஷ்ணுவின் பெயரை உச்சரிக்க உச்சரிக்க அச்சம் இல்லாத வாழ்க்கை அமையும். அனைத்துக்காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். கண்ணனை, கிருஷ்ணனை, புருஷோத்தமனை, புரட்டாசி மாத சனியில் வழிபட்டு பொன்னான வாழ்வை அமைத்துக்கொள்ளுங்கள்.
Tags:    

Similar News