செய்திகள்

உ.பி.யில் பெய்த பேய் மழைக்கு 44 பேர் பலி

Published On 2018-04-12 18:00 GMT   |   Update On 2018-04-12 18:00 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெய்த பேய் மழையில் சிக்கி இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் முழுவதும் கடந்த சில் தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள 18 மாவட்டங்களில் நேற்று பெய்த பேய் மழையில் சிக்கி இதுவரி 44 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 180க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஆக்ராவில் அதிகமாக 15 பேரும், பெரோசபாத், மதுராவில் தலா 4 பேரும், உன்னாவ் பகுதியில் 3 பேரும், பைசாபாத், பாரபங்கி, லக்கிம்பூர் கேரி பகுதிகளில் தலா 2 பேரும் பலியாகி உள்ளனர்.

மேலும், மழையில் சிக்கி சேதமான மாவட்டங்களுக்கு முதல் கட்டமாக 8 கோடி ரூபாய் அரசு நிதியுதவி ஒதுக்கியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #Tamilnews
Tags:    

Similar News