செய்திகள்
லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளி போலீசார் சந்தை மைதானத்தில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற புளியம்பட்டி முல்லை நகரை சேர்ந்த நாகராஜ் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது.