இந்தியா
கொரோனா வைரஸ்

கேரளாவில் வேகம் காட்டும் கொரோனா - புதிதாக 55,475 பேருக்கு பாதிப்பு

Published On 2022-01-25 13:24 GMT   |   Update On 2022-01-25 13:24 GMT
கேரளாவில் தற்போது 2,85,365 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55,475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,25,086 ஆக உயர்ந்துள்ளது. இதில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு பதிவாகி உள்ளது.

கேரளாவில் கொரோனாவால் ஏற்பட்ட 154 உயிரிழப்புகள் தற்போது மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்படி இன்றைய உயிரிழப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 52,141 ஆக அதிகரித்துள்ளது.

அதே சமயம் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 30,226 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 53,86,868 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் தற்போது 2,85,365 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News