செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்தில் நாளைமுதல் ரேஷன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம்

Published On 2021-06-07 16:51 GMT   |   Update On 2021-06-07 16:51 GMT
கொரோனா நிதியின் 2-ம் தவணையாக ரூ. 2000 வழங்குவதற்காகவும், ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டதாலும், ரேசன் கடை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலையின் பரவல் படிப்படியாக குறைந்து வருவதையடுத்து தமிழகத்தில் இன்று முதல் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரேஷன் கடைகள் நாளைமுதல் காலை 9 மணிமுதல் 12.30 மணிவரை மற்றும் மதியம் 2 முதல் 5 மணிவரை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் ஜூன் 11 முதல் 14 வரை முற்பகலில் அத்தியாவசிய பொருள்களும், பிற்பகலில் கொரோனா நிதியின் இரண்டாம் தவணை ரூ. 2,000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News