ஆன்மிகம்
வராஹி

வீட்டில் வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபடும் முறை

Published On 2021-01-16 01:26 GMT   |   Update On 2021-01-16 01:26 GMT
வீட்டில் வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபடும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
வராகி வழிபாடு வீட்டில் செய்ய ஒரு தனி இடம் அமைத்துக்கொள்ள வேண்டும். எந்த இடத்தில், எந்த நேரத்தில் செய்கிறோமோ அதே இடத்தில் தான் தினசரி செய்ய வேண்டும். வழிபாட்டிற்கு வராகி அம்மன் படம், அல்லது விளக்கு ஜோதி வடிவாகவே வழிபடலாம். காலை, மாலை குளிக்கின்றபோது தண்ணீரில் துளசி, வில்வம் ஒரு கைபிடி போட்டு குளிக்க வேண்டும். பூஜை அறையில் வராகி படத்தை வைப்பதை காட்டிலும், தனி அறையில் பூஜை செய்வதுதான் சிறப்பு. 

அன்னைக்கு அருகில் ஒரு விநாயகர் சிலை அல்லது படத்தை வசதிக்கு ஏற்றார்போல் வைத்துக்கொள்ளலாம். தினசரி பூஜை செய்யும் இடத்தில் பன்னீரில் மஞ்சள் தூள் கலந்து, 5 ஏலக்காய் நுணுக்கி அதில் போட்டு அந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். வெள்ளிக்கிழமை, பஞ்சமி தோறும் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை செய்யும் போது நீலம் மற்றும் சிகப்பு நிற ஆடையை பயன்படுத்தலாம். சுத்தமான மஞ்சள், குங்குமம் பூஜைக்கு பயன்படுத்த வேண் டும்.

பூஜைக்கு தேவையான பொருட்கள், நைவேத்தியம் எல்லாம் சேகரித்து வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும். முதலில் குருவை மானசீகமாக வழிபாடு செய்து ‘குருவடி சரணம் திருவடி சரணம்’ என்று 9 முறை கூறவும். பின்பு விநாயகருக்கு அருகம்புல் கொண்டு 21 முறை ‘விநாயகா நம’ என கூறி அர்ச்சிக்க வேண்டும். விநாயகருக்கு தீபாராதனை காண்பித்து நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும். 

வராகி அன்னையை துளசி, வில்வம், நீலசங்கு பூ மூன்றையும் கலந்து வராகி மூல மந்திரம் மற்றும் வராகி மாலை பாடி அர்ச்சனை செய்ய வேண்டும். பூஜையில் அமர்ந்த பின் எழக்கூடாது. அர்ச்சனை முடித்த பிறகு அன்னைக்கு பிடித்த நைவேத்தியம் வைத்து தீபாராதனை காட்டி தரையில் விழுந்து வணங்க வேண்டும். பின் நைவேத்தியம் பகிர்ந்து கொடுத்து நாமும் உண்ணலாம்.
Tags:    

Similar News