உள்ளூர் செய்திகள்
மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு
சீர்காழியில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழியில் மதநல்லிணக்கமாக நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளருமான முபாரக், நகர்மன்ற உறுப்பினர் ரஹ்மத்நிஷா பாரூக் ஆகியோர் தலைமை வகித்தனர்.
பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, நகர்மன்றத் தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன், துணைத் தலைவர் சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ பங்கேற்று இப்தார் நோன்பு திறப்பை தொடங்கி வைத்தார். இதில் சீர்காழி நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.