செய்திகள்
தற்கொலை

மத்தூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Published On 2021-04-04 12:38 GMT   |   Update On 2021-04-04 12:38 GMT
மத்தூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:

போச்சம்பள்ளி தாலுகா புது ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 31). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக சேலம், தர்மபுரியில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த மேகநாதன் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மேகநாதன் இறந்து விட்டார். இது குறித்து மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News