செய்திகள்
பிரதமர் மோடி

மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம் - பிரதமர் மோடி நன்றி

Published On 2019-12-09 19:24 GMT   |   Update On 2019-12-09 19:27 GMT
மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேறியதற்கு பிரதமர் மோடி டிவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து  மத பாகுபாட்டால் வெளியேறி வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பா.ஜனதா தனது பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, 1955-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016-ம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது.

மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. உள்துறை மந்திரி அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எந்த மதத்திற்கோ, சிறுபான்மையினருக்கோ எதிரானது அல்ல. மசோதாவில் பாகுபாடுகள் காட்டப்படவில்லை. பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட 6 மத அகதிகள் குடியுரிமை பெற இந்த மசோதா அனுமதி அளிக்கும்.



இந்த அகதிகள், குடியுரிமை பெறுவதற்கு அவர்களின் பெற்றோர் பிறந்த இடம் தொடர்பான ஆதாரம் தர வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து 6 ஆண்டுகள் தங்கியிருந்தால் குடியுரிமை பெற முடியும். மசோதா தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்து அதனைக்குறித்து விளக்கம் அளித்து உரையாற்றினார்.  அதனை தொடர்ந்து மக்களவையில் நடைபெற்ற குடியுரிமை சட்டதிருத்த மசோதா மீதான வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக 311 பேரும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.  இதனையடுத்து மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றம் செய்யப்பட்டது.

மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்ட பின் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில்,

இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதா வெற்றிகரமாக  நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில், “விரிவான விவாதத்திற்குப் பிறகு, குடியுரிமை (திருத்த) மசோதா, 2019-ஐ மக்களவையில் நிறைவேற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. மசோதாவை ஆதரித்த பல்வேறு எம்.பி.க்கள் மற்றும் கட்சிகளுக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த மசோதா இந்தியாவின் பல  நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. மேலும் மனிதாபிமானங்களுக்கு மதிப்பளிக்கிறது.

குடியுரிமை (திருத்த) மசோதா, 2019 இன் அனைத்து அம்சங்களையும் தெளிவாக விளக்கியதற்காக உள்துறை மந்திரிஅமித்ஷாவை நான் சிறப்பாகப் பாராட்ட விரும்புகிறேன். மக்களவையில் நடந்த விவாதத்தின் போது அந்தந்த எம்.பி.க்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் விரிவான பதில்களை அளித்தார்” என்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News