செய்திகள்
உள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை எனக்கூறி தமிழக அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி:
தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி தேர்தலை நடத்தவில்லை என கூறி ஜெயசுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி பாப்டே முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். நகராட்சி, மாநகராட்சியில் தேர்தல் நடத்தாததை கோர்ட்டு அவமதிப்பாக கருத முடியாது என நீதிபதி கூறினார்.
தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி தேர்தலை நடத்தவில்லை என கூறி ஜெயசுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி பாப்டே முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். நகராட்சி, மாநகராட்சியில் தேர்தல் நடத்தாததை கோர்ட்டு அவமதிப்பாக கருத முடியாது என நீதிபதி கூறினார்.