செய்திகள்
கோப்பு படம்.

கோவை அருகே மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவர் பலி

Published On 2020-11-21 14:49 GMT   |   Update On 2020-11-21 14:49 GMT
கோவை அருகே மர்ம காய்ச்சலுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை:

கோவை சுந்தராபுரம் அருகே மாச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுடைய மகன் சோலைராஜன் (வயது 16). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்று காரணமாக தொண்டை பகுதி வீங்கி அவதிப்பட்டு வந்தார். இதற்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சோலைராஜனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் மிகவும் சோர்வடைந்து மயங்கிய நிலையில் இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். அவர் மர்ம காய்ச்சல் தாக்கி இறந்ததாக தெரிகிறது. இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News