செய்திகள்
முககவசம் அணியாத 275 பேர் மீது வழக்கு
நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாத 275 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
நாமக்கல்:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் சுற்றித்திரியும் நபர்கள் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய போலீசார் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 275 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.