செய்திகள்
கொரோனா வைரஸ்

மதுரையில் கொரோனாவுக்கு வாலிபர் பலி

Published On 2020-11-24 09:41 GMT   |   Update On 2020-11-24 09:41 GMT
மதுரையில் கொரோனாவால் நேற்று 24 பேர் பாதிக்கப்பட்டனர். இதுபோல், வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.
மதுரை:

மதுரையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் நாளொன்றுக்கு 30-க்கும் குறைவான நபர்களே கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில், மதுரையில் நேற்று புதிதாக 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 20 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 533 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் நேற்று 42 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 35 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 245 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

மதுரையில் கடந்த 2 தினங்களாக கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. இதற்கிடையே நேற்று மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 34 வயது வாலிபர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பாதிப்புடன் வேறு சில பிரச்சினைகள் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனுடன் சேர்த்து மதுரையில் இதுவரை 437 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News