செய்திகள்
வாணாபுரம் பகுதியில் திடீரென வீசிய காற்றால் கரும்பு பயிர்கள் சாய்ந்தன
வாணாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் திடீரென வீசிய காற்றால் பயிரிடப்பட்டு இருந்த கரும்பு பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வாணாபுரம்:
வாணாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான நவம்பட்டு, தச்சம்பட்டு, அல்லிகொண்டப்பட்டு, வெறையூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்தசில நாட்களாகத் திடீரென காற்று வீசியது. இதனால் நவம்பட்டு கிராமத்தில் பயிரிடப்பட்டு இருந்த கரும்பு பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பலர் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் பெரும்பாலும் கரும்பு பயிரிடப்படுகிறது. ஒருசில இடங்களில் கரும்பு பயிரிட்டு 5 மாதங்கள் ஆகிறது. தற்போது கரும்பு நன்றாக செழித்து வளர்ந்திருந்தது. கடந்தசில நாட்களாக திடீர் திடீரென வீசிய காற்றாலும், மழையாலும் கரும்பு வேருடன் சாய்ந்து சேதமாகி விட்டது. பலர் கடன் வாங்கி விவசாயம் செய்தும் எந்தப் பயனும் இல்லை, என வேதனை தெரிவித்தனர்.
வாணாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான நவம்பட்டு, தச்சம்பட்டு, அல்லிகொண்டப்பட்டு, வெறையூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்தசில நாட்களாகத் திடீரென காற்று வீசியது. இதனால் நவம்பட்டு கிராமத்தில் பயிரிடப்பட்டு இருந்த கரும்பு பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பலர் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் பெரும்பாலும் கரும்பு பயிரிடப்படுகிறது. ஒருசில இடங்களில் கரும்பு பயிரிட்டு 5 மாதங்கள் ஆகிறது. தற்போது கரும்பு நன்றாக செழித்து வளர்ந்திருந்தது. கடந்தசில நாட்களாக திடீர் திடீரென வீசிய காற்றாலும், மழையாலும் கரும்பு வேருடன் சாய்ந்து சேதமாகி விட்டது. பலர் கடன் வாங்கி விவசாயம் செய்தும் எந்தப் பயனும் இல்லை, என வேதனை தெரிவித்தனர்.