உள்ளூர் செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் 52 ஆயிரத்து 353 பேருக்கு தடுப்பூசி
விருதுநகர் மாவட்டத்தில் 20 லட்சத்து 29 ஆயிரத்து 605 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 691 மையங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் 22 ஆயிரத்து 74 பேருக்கு முதல் தவணைத்தடுப்பூசியும், 30ஆயிரத்து 279 பேருக்கு இரண்டாவது தவணைத்தடுப்பூசியும் என மொத்தம் 52 ஆயிரத்து 353 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 20 லட்சத்து 29 ஆயிரத்து 605 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.