செய்திகள்
கோப்புபடம்

வத்தலக்குண்டு அருகே தந்தையை அடித்து கொன்ற மகன்கள் கைது

Published On 2021-06-07 09:34 GMT   |   Update On 2021-06-07 09:41 GMT
வத்தலக்குண்டு அருகே தந்தையை அடித்துக் கொன்ற மகன்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள செங்கட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் வனராஜ் (வயது 51). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதே போல் நேற்று ஏற்பட்ட தகராறில் தனது மனைவியை வனராஜ் கத்தியால் குத்தினார்.

அவர் வலியால் சத்தம் போடவே அருகில் இருந்த அவர்களது மகன்கள் முத்துசாமி (29), ஊர்காலன் (24) ஆகியோர் ஓடி வந்து தனது தந்தையை சத்தம் போட்டனர்.

மேலும் அவரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த வனராஜ் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கத்திக்குத்தில் படுகாயமடைந்த ஈஸ்வரி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வீரன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து முத்துச்சாமி, ஊர்காலன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News