செய்திகள்
கோவிலுக்குள் வாலிபர் தற்கொலை- போலீசார் விசாரணை
கோவிலுக்குள் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி:
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மணிகண்டனின் மனைவி அழகு (வயது 51). இவர்களது மகன் ராதாகிருஷ்ணன் (18). இவர், உறவினர் ஒருவர் வீட்டு திருமணத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாயாருடன் திருச்சிக்கு வந்து, சத்தியமூர்த்திநகரில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கி இருந்தார்.
ராதாகிருஷ்ணன் கடந்த 2 நாட்களாக செல்போனில் சூதாட்டத்தில் அதிகம் தோற்றுப்போனதால் அவர் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் அதே பகுதியில் உள்ள சங்கிலியாண்டவர் கோவிலுக்கு சென்று அங்குள்ள மண்டபத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த கோட்டை போலீசார் விரைந்து சென்று ராதாகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவிலுக்குள் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மணிகண்டனின் மனைவி அழகு (வயது 51). இவர்களது மகன் ராதாகிருஷ்ணன் (18). இவர், உறவினர் ஒருவர் வீட்டு திருமணத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாயாருடன் திருச்சிக்கு வந்து, சத்தியமூர்த்திநகரில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கி இருந்தார்.
ராதாகிருஷ்ணன் கடந்த 2 நாட்களாக செல்போனில் சூதாட்டத்தில் அதிகம் தோற்றுப்போனதால் அவர் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் அதே பகுதியில் உள்ள சங்கிலியாண்டவர் கோவிலுக்கு சென்று அங்குள்ள மண்டபத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த கோட்டை போலீசார் விரைந்து சென்று ராதாகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவிலுக்குள் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.