செய்திகள்
புதுச்சேரி

புதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்

Published On 2021-06-14 14:24 GMT   |   Update On 2021-06-14 14:24 GMT
பஸ், ஆட்டோ, டாக்சிகள் இயங்கவும் அனுமதிக்கப்பட்டது. ஆனால், புதுவை அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் கடந்த 7-ந் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது.

மதுக்கடை உட்பட அனைத்துக்கடைகளையும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது.

பஸ், ஆட்டோ, டாக்சிகள் இயங்கவும் அனுமதிக்கப்பட்டது. ஆனால், புதுவை அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு பஸ், தனியார் பஸ்கள் இயங்கவில்லை. பூங்கா, தியேட்டர், நூலகம் செயல்பட அனுமதி இல்லை. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று 14-ந் தேதி முடிகிறது. ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் மேலும் தளர்வுகள் குறித்து இன்று அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில்  புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது
Tags:    

Similar News