செய்திகள்
ஏர்வாடி அருகே ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஏர்வாடி அருகே களக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஏர்வாடி:
கடலூர் மாவட்டம் தெற்குத்திட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை கண்டித்தும், ஊராட்சி பணிகளில் தலைவரின் உறவினர்கள் தலையிடுவதை தடுக்க வலியுறுத்தியும் ஊராட்சி செயலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும் களக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஒன்றிய தலைவர் திருமலைநம்பி தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் வானுமாமலை முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகை ஏந்தி கோஷமிட்டனர்.