உள்ளூர் செய்திகள்
ஆதரவற்றவருக்கு உணவு வழங்கிய போலீசார்.

தென்காசியில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய போலீசார்

Published On 2022-01-10 10:00 GMT   |   Update On 2022-01-10 10:00 GMT
முழு ஊரடங்கு உத்தரவையொட்டி தென்காசி பகுதியில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் உணவு வழங்கினர்.
தென்காசி:

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நேற்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில் தென்காசி பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் நபர்கள், முதியவர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தென்காசி காவல்துறையினர் இணைந்து 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்.
Tags:    

Similar News