செய்திகள்
தஞ்சை அருகே செல்போன் திருடிய 2 பேர் கைது
தஞ்சை அருகே செல்போன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் பகுதியில் சந்தேகப்படும்படி 2 பேர் சுற்றி கொண்டிருந்தனர். அவர்களை தஞ்சை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஊரணிபுரத்தை சேர்ந்த சிவா(வயது48), தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த உதயா(32) என்பதும், இவர்கள் கீழவாசல் டவுன் போலீஸ் நிலைய சாலையில் உள்ள ஒரு டீக்கடை உரிமையாளரிடம் செல்போன் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.