உள்ளூர் செய்திகள்
ரே‌ஷன் அரிசி

ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டில் பதுக்கிய 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்

Published On 2021-12-28 07:16 GMT   |   Update On 2021-12-28 07:16 GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டில் பதுக்கிய 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி உள்ள வெள்ளாளர் தெருவில் ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் வட்ட வழங்கள் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து அங்கு சென்ற வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் தனி வருவாய் அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் அந்த பகுதியில் ஒரு வீட்டின் பின்புறத்தில் சென்றனர் அப்போது அங்கே நின்று கொண்டிருந்த 4 பேர் அதிகாரிகள் வருவதை அறிந்து தப்பி ஓடிவிட்டனர்

அங்கு சோதனை செய்த போது பிறகு 2 டன் ரே‌ஷன் அரிசி பதுக்கி வைப்பட்டு இருந்தது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

ரே‌ஷன் அரிசி பதுக்கல் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News