உள்ளூர் செய்திகள்
கடலூர் உழவர் சந்தை முன்பு பரபரப்பு- சிறு வியாபாரிகளை அப்புறப்படுத்திய போலீசார்
கடலூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் உழவர் சந்தை முன்பு சாலையில் அமர்ந்து இருந்த சிறு வியாபாரிகளை அப்புறப்படுத்தினர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப் புலியூரில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. உழவர் சந்தை முன்பு காய்கறி, பழ வகைகள் உள்ளிட்ட பல்வேறு சிறு வியாபாரிகள் சாலையில் அமர்ந்து பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
நாளை மறுதினம் (14-ந் தேதி) தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு மஞ்சள் மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் காலை முதல் விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றது.
இதன் காரணமாக வழக்கத்தைவிட அதிக அளவில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு திரண்டு வந்ததால் காலை முதல் கடலூர் - சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து கடலூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் உழவர் சந்தை முன்பு சாலையில் அமர்ந்து இருந்த சிறு வியாபாரிகளை அப்புறப்படுத்தினர். பின்னர் சாலையில் அமர விடாமல் உள்ளே தள்ளி அமர வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் சாலையோரத்தில் இரும்புத் தடுப்புகளை அமைத்து போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டனர். இது மட்டுமின்றி அங்கு பாதுகாப்பு பணியில் தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
கடலூர் திருப்பாதிரிப் புலியூரில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. உழவர் சந்தை முன்பு காய்கறி, பழ வகைகள் உள்ளிட்ட பல்வேறு சிறு வியாபாரிகள் சாலையில் அமர்ந்து பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
நாளை மறுதினம் (14-ந் தேதி) தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு மஞ்சள் மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் காலை முதல் விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றது.
இதன் காரணமாக வழக்கத்தைவிட அதிக அளவில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு திரண்டு வந்ததால் காலை முதல் கடலூர் - சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து கடலூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் உழவர் சந்தை முன்பு சாலையில் அமர்ந்து இருந்த சிறு வியாபாரிகளை அப்புறப்படுத்தினர். பின்னர் சாலையில் அமர விடாமல் உள்ளே தள்ளி அமர வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் சாலையோரத்தில் இரும்புத் தடுப்புகளை அமைத்து போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டனர். இது மட்டுமின்றி அங்கு பாதுகாப்பு பணியில் தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.