செய்திகள்
பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல் மந்திரி சந்திப்பு
கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா வயது மூப்பு காரணமாக தனது பதவியை கடந்த 26-ம் தேதி ராஜினாமா செய்தார்.
புதுடெல்லி:
கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.
எடியூரப்பாவின் தீவிரமான ஆதரவாளரான அவர் நேற்று உத்தர கன்னடா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிரதமர் மோடி நேரம் ஒதுக்கியதும் டெல்லி செல்ல திட்டமிட்டு இருப்பதாக பதவி ஏற்றதும் பசவராஜ் பொம்மை கூறினார். பிரதமரை நேரில் சந்திக்க பசவராஜ் பொம்மைக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், முதல் மந்திரி பசவராஜ் பொம்மை இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
மேலும், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோரை பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்துப் பேசினார்.