செய்திகள்
சூரியகாந்தி விதை

வெள்ளகோவிலில் ரூ.26 லட்சத்திற்கு சூரிய காந்தி விதை ஏலம்

Published On 2021-10-08 07:27 GMT   |   Update On 2021-10-08 07:27 GMT
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும்,வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலமும் நடைபெறும்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும்,வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.

இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்குகொண்டு வருவார்கள். நேற்று 52 விவசாயிகள் 42 ஆயிரத்து 856 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் முத்தூர், மூலனூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதிகளை  சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை ரூ.65.50க்கும், குறைந்தபட்சம் ரூ.52.19க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.26 லட்சத்து 36 ஆயிரத்து 664 வணிகம் நடைபெற்றது.
Tags:    

Similar News