செய்திகள்
மைக்கேல் ஹோல்டிங், எம்எஸ் டோனி

இந்திய அணிக்கு டோனி போன்று ஒரு வீரர் தேவை: மைக்கேல் ஹோல்டிங்

Published On 2020-11-29 11:34 GMT   |   Update On 2020-11-29 11:34 GMT
இந்திய அணி சேஸிங் செய்யும்போது டோனி போன்ற ஒரு வீரர் தேவை என மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
சிட்னி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி நிர்னையத்த 375 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் மட்டுமே எடுத்த்து. இதனால் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மைக்கேல் ஹோல்டிங் கூறுகையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டோனி இல்லாமல் தடுமாறுவது எனக்கு உறுதியாகத் தெரியும். டோனி இருந்தபோது இந்திய அணி சிறப்பாகச் சேசிங் செய்தது. டாஸ் வெல்ல வேண்டும் என்ற பயம் அவர்களுக்கு இல்லை.

தற்போதைய அணியிலும் சிறந்த பேட்டிங் வரிசை உள்ளது. சில திறமையான வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதைப் பார்க்க முடிந்தது. ஆனாலும், டோனி மாதிரி ஒரு வீரர் அணிக்குத் தேவைப்படுகிறார். அவருடைய திறமை என்னவென்று அவருக்குத் தெரியும். 

அதேபோல, இலக்கை எப்படி எட்டவேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். அவருடன் யார் பேட்டிங் செய்தாலும், அவர்களுடன் சகஜமாகப் பேசி அவர்களுக்கு உதவுவார். ரன் சேசிங்கில் டோனி கைதேர்ந்தவர். விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு டோனியைப் போன்றதொரு வீரர் அவசியம்.

சேஸிங் செய்யும் டோனியிடம் பயத்தை பார்க்க முடியாது. அவருடைய திறமை அவருக்கும் தெரியும். சேஸிங் எப்படி செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும். யார் அவருடன் பேட்டிங் செய்தாலும் அவர்களுக்கு உதவி செய்வார். சிறந்த பேட்டிங் அணிதான். ஆனாரல், சேஸிங் செய்யும்போது டோனி ஸ்பெஷசல் மேன்” என்றார்.
Tags:    

Similar News