செய்திகள்
சமூக ஆர்வலர் சாண்டி பிரசாத் பட் மற்றும் அவருக்கு வழங்கப்பட உள்ள விருது

தேசிய ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது அறிவிப்பு

Published On 2019-10-11 11:30 GMT   |   Update On 2019-10-11 11:30 GMT
காங்கிரஸ் சார்பில் வழங்கப்படும் நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது சமூக ஆர்வலர் சாண்டி பிரசாத் பட்டுக்கு வழங்கப்பட உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் நல்லிணக்கத்தை பேணி வளர்க்கப் பாடுபடும் தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டுவருகிறது. 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் பெயரில் வழங்கப்படும் இந்த விருதை யாருக்கு வழங்கவேண்டும்? என தேர்வு செய்யும் பணியில் பலதுறைகளை சேர்ந்த வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.



இந்நிலையில், 2017 மற்றும் 2018-ம் ஆண்டுக்கான 31-வது நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருதுக்கு சுற்று சூழலியலாளரும் சமூக ஆர்வலருமான சாண்டி பிரசாத் பட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திரா காந்தியின் நினைவு தினமான அக்டோபர் 31-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி இந்த விருதை சாண்டி பிரசாத் பக்துக்கு வழங்குகிறார். இந்த விருதுடன் இணைந்து ரூ. 10 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்பட உள்ளது.
Tags:    

Similar News