லைஃப்ஸ்டைல்
இறால் கட்லெட்

குழந்தைகளுக்கு விருப்பமான இறால் கட்லெட்

Published On 2019-11-02 08:33 GMT   |   Update On 2019-11-02 08:33 GMT
குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறால் வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

இறால் 500 கிராம்,
வெங்காயம் - ஒன்று,
பச்சை மிளகாய் - 3,
இஞ்சி - துண்டு ஒன்று,
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
பூண்டு - 5 பல்,
முட்டை - ஒன்று,
சோளமாவு - ஒரு ஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்,
பிரெட் தூள் - தேவையான அளவு
கரம் மசாலா - அரை ஸ்பூன்,
சாட் மசாலா - அரை ஸ்பூன்,
மிளகு தூள் - அரை ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்.



செய்முறை :

இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி இறாலை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டி விடவும்.

வடிகட்டிய இறாலை மிகவும் சிறியதாக பொடிபொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

இந்த இறாலுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுத்து அதனுடன் கரம் மசாலா, சாட் மசாலா, மிளகு தூள் சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.

அதில் பிரட் தூள், சோளமாவு மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்ந்து அனைத்தையும் ஒன்றாக கலந்து கெட்டியாக வடை செய்கிற மாதிரி செய்து நடுவில் முந்திரி பருப்பு வைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி 35 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்தால் சுவையான இறால் கட்லெட் தயார்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News