செய்திகள்
தடுப்பூசி (கோப்புப்படம்)

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-10-23 10:36 GMT   |   Update On 2021-10-23 10:36 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வந்தது. இந்த முகாம்களில் 1 லட்சம் மக்கள் வரை தடுப்பூசி செலுத்தி வந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் சிக்கன், மட்டன் சாப்பிடும் அசைவபிரியர்கள் தடுப்பூசி செலுத்தாமல் தவிர்த்து வருவதாக தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதுவரை பல தடுப்பூசி முகாம்கள் நடந்து விட்டதால் இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாமுக்கு குறைந்த அளவிலான மக்கள் வருகை தந்தனர். சில முகாம்களில் நீண்ட நேரத்துக்கு பின்னர் ஓரிருவர் மட்டும் வருகை தந்தனர்.

திருவண்ணாமலை நகரம் மற்றும் வேங்கிக்கால், ஆடையூர், அத்தியந்தல், பண்டிதபட்டு, ஆணாய் பிறந்தான் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் இன்று காலை 7 மணிக்கு முகாம் தொடங்கியது. திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தல் ஊராட்சியில் இன்று 23-முறையாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

அத்தியந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனை செவிலியர் மேரி ஆஷா கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தினார். இந்த ஊராட்சியில் இதுவரை தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் போடாதவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும் வாக்காளர் பட்டியலை வைத்தும் ஊசி போடாத நபர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தினர். முன்னதாக கிரிவலப்பாதையில் வசிக்கும் சாமியார்களுக்கும் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று நேற்றே விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் சாமியார்களும் இந்தமுகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
Tags:    

Similar News