செய்திகள்
தாராபுரம் பள்ளியில் தேசிய மாணவர் படை தொடக்கம்
விழா தொடக்கமாக கொடியேற்றப்பட்டது. பின்னர் சிறப்பு அழைப்பாளர்கள் சிறப்புரையாற்றினர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகரம் பப்ளிக்பள்ளியில் தேசிய மாணவர் படை தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி முதல்வர் ஞானப்பண்டிதன் தலைமை தாங்கினார். கர்னல் ஜே.பி.எஸ். சவுஹான் ,கமாண்டிங் அதிகாரி மற்றும் சுபேதார் மேஜர் ரவீந்தரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மாணவர்களின் வரவேற்பு அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் சிறப்பு அழைப்பாளர்கள் சிறப்புரையாற்றினர்.