செய்திகள்
தற்கொலை

ஊரடங்கால் வேலை இல்லாததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

Published On 2021-06-23 09:32 GMT   |   Update On 2021-06-23 09:32 GMT
சங்கரன்கோவிலில் ஊரடங்கால் வேலை இல்லாததால் விரக்தி அடைந்த தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

நெல்லை:

சங்கரன்கோவிலை சேர்ந்தவர் மகேஷ்வரன்(வயது 36). இவருக்கு திருமணமாகவில்லை. பெற்றோர் இறந்துவிட்டதால் அப்பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்துவந்தார். கூலி வேலைக்கு சென்றுவந்த மகேஷ்வரன் ஊரடங்கால் வேலை இல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். 

அவர் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மகேஷ்வரன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றிக்கொண்டு தீ வைத்தார். படுகாயம் அடைந்த அவரை சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

Tags:    

Similar News