உள்ளூர் செய்திகள்
கடன் வழங்க கோரி கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை
விவசாயிகள் கடன் கோரி சென்றால் கடன் நிலுவை இல்லை என்கிற சான்று கேட்கிறார்கள்.
தாராபுரம்:
கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் கடன் கோரி சென்றால் கடன் நிலுவை இல்லை என்கிற சான்று கேட்கிறார்கள். இதனால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை உள்ளது.
சில அதிகாரிகள் என்.ஒ.சி சான்று அளித்தால் தான் கடன் தர முடியும் என்று உறுதியாக உள்ளார்கள். இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே இந்த பருவத்துக்கு பயிர் கடன் வழங்க வேண்டும்,
சான்று இல்லையென்றாலும் கடன் தர வேண்டும் என்று கோரி தாராபுரம் அடுத்துள்ள குண்டடம் கூட்டுறவு வங்கி முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடன் வழங்க கோரி கோஷம் எழுப்பினர்.