தொழில்நுட்பம்
டிக்டாக்

அமெரிக்காவில் டிக்டாக் பயன்படுத்த தடை - ஆனால் ஒரு டுவிஸ்ட்

Published On 2020-07-23 06:03 GMT   |   Update On 2020-07-23 06:03 GMT
அமெரிக்காவில் இவர்கள் இந்த சாதனங்களில் டிக்டாக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் ஃபெடரல் ஊழியர்கள் சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை அரசு வழங்கிய சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவு அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. பயனர் விவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசாங்க சாதனங்களில் டிக்டாக் பயன்படுத்த தடை விதிக்கும் விதிமுறையை அமெரிக்க செனட் சபையில் செனட்டர் ஜோஷ் ஹாவ்லி பரிந்துரைத்தார். இதன் மீது வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. 



அமெரிக்காவில் டிக்டாக் அதிக பிரபலமாக இருப்பதால், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் தங்களது தகவல்கள் பீஜிங்கில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு செல்லும் வாய்ப்புகள் இருப்பதாக அச்சம் தெரிவித்து உள்ளனர். 

முன்னதாக பிரதிநிதிகள் சபையில் இது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 336-71 என்ற அடிப்படையில் பாதுகாப்பு நிதியின் கீழ் அரசு வழங்கிய சாதனங்களில் டிக்டாக் பயன்படுத்த தடை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஒப்புதலை தொடர்ந்து விரைவில் டிக்டாக் தடை அமெரிக்காவில் சட்டமாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News