செய்திகள்
டிடிவி தினகரன்

சமூக ஆர்வலர் மீது தாக்குதல்- டி.டி.வி.தினகரன் கண்டனம்

Published On 2019-08-29 09:02 GMT   |   Update On 2019-08-29 09:02 GMT
சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் தாக்கப்பட்டதற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் தாக்கப்பட்டதற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

சேலத்தில் சமூக ஆர்வலர் பியூஸ்மானுஷ் பா.ஜனதா கட்சியினரால் தாக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. காவல் துறையினரின் கண் எதிரிலேயே இச்சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தாக்கியதற்கு பதிலாக காவல் துறையினரை வைத்து அவரை வெளியேற்றி இருக்கலாம்.

அதே நேரத்தில் ஜனநாயக முறையில் எதிர்ப்பை தெரிவிக்க எத்தனையோ வழிகள் இருக்கும் போது, ஓர் அரசியல் கட்சியின் அலுவலகத்திற்குள் நுழைந்து இப்படி நடந்து கொள்வது ஏற்புடையதல்ல. இந்நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News