ஆன்மிகம்
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

Published On 2021-04-28 02:54 GMT   |   Update On 2021-04-28 02:54 GMT
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெளியூரில் இருந்து தரிசனத்துக்காக வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோவிலில் அன்னதானமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை நம்பி உள்ள முதியவர்கள் நேற்று சிரமப்பட்டனர்.
Tags:    

Similar News