உள்ளூர் செய்திகள்
கல்குவாரி

திருவண்ணாமலையில் கல்குவாரியில் நிர்வாண நிலையில் ஆண் பிணம்

Published On 2022-04-17 08:44 GMT   |   Update On 2022-04-17 08:44 GMT
திருவண்ணாமலையில் கல்குவாரியில் நிர்வாண நிலையில் கிடந்த ஆண் பிணம் மீட்கப்பட்டது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அடி அண்ணாமலை பகுதியில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. 

அங்குள்ள ஒரு கல்குவாரி குட்டையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பது இன்று காலை தெரியவந்தது.நிர்வாண நிலையில் கிடந்த அந்த ஆண் உடலை பார்த்த சிலர் இதுபற்றி திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான நபர் சில நாட்களுக்கு முன்பே இறந்து இருக்கலாம் என்று கூறப்படு கிறது.அவரது உடல் ஊதிய நிலையில் காணப் படுகிறது. அவர் குளிக்க சென்ற சாமியாராக இருக்கலாம் என்று தெரிகிறது.

அதன் அடிப்படை யில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இதில் குற்ற பின்னணி எதுவும் உள்ளதா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கல்குவாரியில் ஆண் பிணம் மீட்கப்பட்ட சம்பவம் அடி அண்ணாமலை பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News