செய்திகள்

மது போதையில் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது

Published On 2019-04-29 16:27 GMT   |   Update On 2019-04-29 16:27 GMT
ஜெயங்கொண்டத்தில் மது போதையில் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா நகரை சேர்ந்தவர் முருகேசன்(50). கூலிதொழிலாளி. இவரது மகன் ராம்குமார்(20) படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். ராம்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி முருகேசன் வேலைக்கு சென்று விட்டு வீட்டில் இருந்தார்.

அப்போது குடிபோதையில் வந்த ராம்குமார் தந்தை முருகேசனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குபதிவு செய்து ராம்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News