செய்திகள்
கல்லூரி மாணவி மாயம்

குமரி மாவட்டத்தில் நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயம்

Published On 2020-01-16 10:28 GMT   |   Update On 2020-01-16 10:28 GMT
குமரி மாவட்டத்தில் நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

குளச்சல் கூட்டப்பிளா விளை பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சிவப்பிரியா (வயது 21). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால் கல்லூரி முடிந்து நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி கல்லூரிக்கு வந்தனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து மாணவியை தோழிகள் வீடு, உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் அன்பரசி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

தக்கலை பத்மநாபபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகவன். இவரது மகள் ராகிணி (வயது 21).

இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் இரவு நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் தக்கலை போலீசில் புகார் செய்தனர்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
இதேப்போல் தக்கலை, முத்தலாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் யூஜின் ஜெரால்டு. இவரது மகள் ஜின்சி (19).

இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் தக்கலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News