செய்திகள்
கோப்பு படம்.

ராணிப்பேட்டை, சோளிங்கரில் நாளை மின்நிறுத்தம்

Published On 2020-11-21 14:21 GMT   |   Update On 2020-11-21 14:21 GMT
ராணிப்பேட்டை மற்றும் சோளிங்கரில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த சிப்காட், முகுந்தராயபுரம் துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராணிப்பேட்டை நகரம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, பாரதிநகர், பெரியார்நகர், அவரக்கரை, சிப்காட், சிட்கோ, பெல், தெங்கால், புளியந்தங்கல், அக்ராவரம், சீக்கராஜபுரம், வானாபாடி, செட்டிதாங்கல், தண்டலம், லாலாபேட்டை, தக்காம்பாளையம், நெல்லிக்குப்பம், ஏகாம்பரநல்லூர், கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம், பேஸ்-3, அம்மூர், வேலம், கல்மேல்குப்பம், கிருஷ்ணாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.

இந்த தகவலை ராணிப்பேட்டை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற் பொறியாளர் ஏ.எல்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் சோளிங்கர், எரும்பி, கீழ்பாலாபுரம், ஆர்.கே.பேட்டை, கல்பட்டு, பத்மாபுரம், வீரமங்கலம், கரிக்கல், பாண்டியநெல்லூர், மேல்வெங்கடாபுரம், கொடைக்கல், ரெண்டாடி, நீலகண்டாராயன் பேட்டை, ஜம்புகுளம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.

மேற்கண்ட தகவலை சோளிங்கர் செயற்பொறியாளர் சங்சர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News