செய்திகள்
கோப்பு படம்.

அரியலூரில் மேலும் 9 பேருக்கு கொரோனா

Published On 2021-04-04 11:43 GMT   |   Update On 2021-04-04 11:43 GMT
அரியலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,838 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,838 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் ஏற்கனவே 49 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 4,748 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 41 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,311 ஆக உயர்ந்துள்ளது. இதில் 21 பேர் ஏற்கனவே உயரிழந்துள்ளனர். 2,281 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 9 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News