செய்திகள்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அக்கட்சியின் தேர்தல் பேச்சுவார்த்தை குழுவுடன் ஆலோசனை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அக்கட்சியின் தேர்தல் பேச்சுவார்த்தை குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை:
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, மதிமுக சார்பில் நான்கு பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அண்மையில் நியமித்துள்ளார்.
இந்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அக்கட்சியின் தேர்தல் பேச்சுவார்த்தை குழுவுடன் ஆலோசனை இன்று நடத்தி வருகிறார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆலோசனை முக்கியமானதாக கருதப்படுகிறது.