செய்திகள்
கைது

நெமிலி அருகே மணல் கடத்தியவர் கைது

Published On 2021-09-20 11:28 GMT   |   Update On 2021-09-20 11:28 GMT
நெமிலி அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த சயனாபுரம் கசகால்வாய் பகுதியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நெமிலி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியோட முயன்றனர். அப்போது சயனாபுரம் பெரிய தெருவை சேர்ந்த தென்னரசு (வயது 20) என்பவரை போலிசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தப்பி ஓடிய மற்றொருவர் சயனாபுரம் பாடசாலை தெருவை சேர்ந்த புருஷோத்தமன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News