உள்ளூர் செய்திகள்
வெள்ளகோவில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி கூடுதலாக வெள்ளகோவில் காவல் நிலையத்தை கவனித்து வந்தார்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து கடந்த 8 மாதங்களாக காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி கூடுதலாக வெள்ளகோவில் காவல் நிலையத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பணியாற்றிய ரமாதேவி வெள்ளகோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார்.