செய்திகள்
கோப்பு படம்

ரெயில் மோதி தொழிலாளி பலி

Published On 2021-10-12 14:54 GMT   |   Update On 2021-10-12 14:54 GMT
ரெயில் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி சரமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெத்தையா மகன் முத்து காமாட்சி (வயது 40). பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று காலையில் தங்கள் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடந்து செல்லும் போது ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன், ஏட்டு அருண்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தொழிலாளி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான தொழிலாளி முத்து காமாட்சிக்கு முருகேஸ்வரி என்று மனைவியும், காயத்ரி என்ற மகளும், பிரேம்குமார் என்று மகனும் உள்ளனர்.
Tags:    

Similar News