செய்திகள்
வாலிபர் தற்கொலை

குரும்பூர் அருகே தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை

Published On 2019-11-05 13:00 GMT   |   Update On 2019-11-05 13:00 GMT
குரும்பூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குரும்பூர்:

குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடியை சேர்ந்தவர் பட்டுராஜ். இவரது மகன் ராஜேஷ்குமார் (வயது 29). இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சித்ராதேவி (28) என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ராஜேஷ்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இவர் குடித்து விட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.  

இந்நிலையில் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதனை அவரது மனைவி சித்ரா தேவி கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த ராஜேஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். 

பின்னர் இது குறித்து அவரது மனைவி குரும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட ராஜேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News